தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
blog

நவீன இலக்கிய இரவு- 22 நவம்பர் 2021

நவீன இலக்கிய இரவு- 22  நவம்பர் 2021
*******************************************
 
தொகுப்பாளர்:
திருமதி. லதா குமார் அவர்கள்.

* திரு. ஆனந்தகுமார்  திருக்குறள் மற்றும் ரிஸ்கா முக்தார் அவர்களின் கவிதைகளைப் பகிர்ந்தார்.அவரின் எதார்த்தமான கவிதை அனைவருக்கும் பிடித்தது.

* திருமதி. மேனகப்புன்னகை அவர்கள்  லா.சா.ரா. அவர்களின் "பாற்கடல்"
சிறுகதையை பகர்ந்தார். அதனைத்தொடர்ந்து சேதுராமன் ஐயா அக்கதையை மிகவும் ரசித்து கருத்துக்கள் பகிர்ந்தார். 

* திருமதி. லதா அவர்கள் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய "திருவரங்கன் உலா" என்கிற சரித்திர நாவலை சுருக்கமாகப் பகிர்ந்தார்.

* திரு.சுரேஷ் அவர்கள் அவரே எழுதிய Thanks giving பற்றிய ஒர் ஆங்கிலக் கவிதையைப் பகிர்ந்தார். நன்றியுணர்தலை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியது.

இறுதியாகத் 
* திருமதி. தீபா அவர்கள்  கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்களின் பாடல் ஒன்றை பகிர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து கருத்துரையாடல்களுடன் சிறப்பானதொரு நவீன இலக்கிய இரவாக இன்று இனிதே நிறைவடைந்தது.



id="btn"/>
Author

லதா குமார்

Author

Ilakkiyairavu18@gmail.com

Email

என் பெயர் லதா குமார். நான் மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கிறேன். எனக்கு புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இப்போது நான் தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதைப் படிக்கப் படிக்கத் தான் கற்றது கைம்மண் அளவு என்பது எவ்வளவு உண்மை என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த இலக்கிய வாசிப்பின் மூலம் அரிய தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொண்டேன். அதன் தாக்கத்தில் சில கவிதைகள் எப்போதாவது எழுதுவேன்.

FEED BACK

No Feedback Arrived Yet! Be the First one

WRITE A COMMENT