கிட்டத்தட்ட
நூறு வருடங்களுக்கு முன்
(1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால்
எழுதப்பட்டது " Richest Man in Babylon " என்ற
இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில் உள்ள
கருத்துக்களுக்காக உலகம்
முழுவதும் தனி
மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும் மிகச்
சிறந்த புத்தகமாக இது பொருளாதார
வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
அப்படி
என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு , ஏறத்தாழ
8000 ஆண்டுகளுக்கு
முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும்
(இன்றைய இராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு
அருகில் உள்ள "ஹில்லா
" , அன்றைய பாபிலோன் ) . பாபிலோனின் தொங்கும்தோட்டம்
நாம் அறிந்ததே , தோட்டம்
மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து
விளங்கிய நகரம் பாபிலோன் .
இத்தனைக்கும்
பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ சிறப்பு
பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ?
ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள்
சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும்
என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும்
காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னே களிமண்
தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில் ஆயிரக்கணக்கான
எழுதப்பட்ட தட்டிகள்
எடுக்கப்பட்டு , அதில் இருந்ததை
தொகுத்துள்ளதாக கூறுகிறார்
நூலாசிரியர் .
பாபிலோனில்
உள்ள இரண்டு நண்பர்கள் என்ன
செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது
இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள்
, பணம்
கையில் தங்குவதற்கு என்ன ரகசியம் என தெரிந்துகொள்ள
கிளம்புகிறார்கள்
இன்னொரு
புறம் பாபிலோனின்
அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அமைச்சரவையில்
விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று
பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி ,சிறிது
காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில் அன்றைய
உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140 அடி
சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை
வாய்ப்பு , பணப்புழக்கம் என மக்களிடம்
பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று கேட்கிறான்
.
மக்கள்
வந்த பணத்தை செலவழித்து
விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .
புத்திசாலி
அரசனின் அடுத்ததாக , யார்
இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே
எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள்
சொல்ல , முதற்கட்டமாக நம்
மக்கள் நூறு
பேரை தேர்ந்தெடுங்கள், பணத்தை
எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி ஆர்கத்தை
படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு
தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான்
,
நாம்
முன்பு விட்டுவிட
நண்பர்களும் , அவர்களுடைய சிறு
வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .
அர்க்கத்
அரசன் சொன்னபடி , 100 பேரை
அழைத்து , நண்பர்களே பணம்
சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ இல்லை
, எனக்கு
என்ன செய்வது என்று , பசீர் என்ற முதியவர்
சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான்
எப்படி பணம் சேர்ப்பது என்று
கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு
சொல்கிறேன் என தனது பாடத்தை
ஆரம்பிக்கிறான்
அர்க்கத்
பெரும்பாலும் நம்மிடம் இருக்கும் ஒல்லியான
பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின்
மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது )
>சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .
>செலவழிப்பதை
கட்டுப்படுத்துங்கள்
> சேர்த்ததை
பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி
குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும்
, குட்டி ... வேண்டாம் முதல்
குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )
> சேர்த்த
பணத்தை இழக்காதீர்கள்
( நம்ம
"warren buffet " தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார் "Never lose your money " )
> உங்களுக்கு
சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள்
, அது தரும் நம்பிக்கை அலாதியானது
> எதிர்கால
வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு
வழி செய்யங்கள்
> வருமானத்தை
பெருக்குங்கள் .
அர்க்கத்
சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன் தனியாக
தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று
, ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து
( இன்றைய BITCOIN
போல ) அனைத்தும்
தொலைத்து நிற்கையில் , தனது
அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப் பார்க்கிறான்
, அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப் பாடம்
(தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம்
)
> தனது வருமானத்தில்
10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்
> கையில்
உள்ள தங்கத்தை , தனக்காக வேலை
வாங்க தெரியும் புத்திசாலியிடம்
தங்கம் சேரும்
>பொறுமையாக
, நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்
>தெரியாததை செய்தால்
தங்கம் ஓடிவிடும் தனக்கு
தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு
பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்க
என படிக்கவும் )
> ஒரு
ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம்
என முதலீடு செய்தால் தங்கம்
கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி
, ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச் சந்தையில் சம்பாதித்து
கொடுக்கிறோம் போன்றவைகள் )
பின்
பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை கையாள்வதில்
புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில் இருந்து தங்கத்தை
வட்டிக்கு விடும் ஒருவர் , "ஐயோ
போச்சே!!! என புலம்புவதை விட ,பணத்தில் ஜாக்கிரதையாக
இருந்து கொள்வது நல்லது " என
தன் அனுபவங்களை சொல்கிறார்
.
பாபிலோனின்
140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி நமது
முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி
காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .
நல்ல
குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால் அடிமையாக
விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால்
, கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது ( கடன்
இருந்தால் வருமானத்தில் 20 % கடனை
அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )
இதனோடு
புத்தகம் முடிகிறது , பணம்
, பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு முதலீடு
செய்வது என எந்தப் பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும்
நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக் கொடுப்பதில்லை
, பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு மாதிரி உழைத்தாலும் மேலும்
ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே நிலைமை
தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக
சில புத்தகங்களே உள்ளன
பொருளாதார
மந்த நிலை வரும் என்று
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த
சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும்
காத்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால்
இருக்கவே இருக்கு " YOLO
வழி " .
-
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/view_details.php
Line Number: 573
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
Line: 573
Function: _error_handlerFile: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
Line: 106
Function: viewFile: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once -
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/view_details.php
Line Number: 581
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
Line: 581
Function: _error_handlerFile: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
Line: 106
Function: viewFile: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
FEED BACK
No Feedback Arrived Yet! Be the First one