தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
category

செந்தில்குமார் பழனிசாமி கவிதைகள்

உயிர் இழுக்கும் போட்டி

புயல்  மழையா... கடும் வெயிலா ...
வானிலை எதுவும் தெரிவதில்லை 
தொலை தூரத்தில்  நிழலாய் 
உருவம் ஒன்று அசைவது  மட்டுமே
இருபத்து நான்குமணி நேரம்
ஒளிபரப்பாகுது  கண்களில்...
கொட்டி வைத்த உணர்ச்சிக் குவியல்கள்
சுரண்டிச் சுரண்டி மொத்தமாய் 
தீர்ந்து போனது
தோலில் சுருக்கமுண்டு சொரணை
என்பது கொஞ்சமும் இல்லை...
ஓடோடிச் சென்று பார்த்த உறவுகள்
காலமெல்லாம் கூட வந்த நட்புகள்
எங்கோ மூளையில் ஒளிந்து கொண்டு
கண்டுபிடிக்கச் சொல்லி  நித்தம்
நினைவுகளோடு விளையாடுகிறார்கள்...
எங்கும் நகராமல் இமை இறுக்க
மூடிக் கொண்டு உடம்பைக் கடத்தி 
இடுகாட்டில் உறங்கும் பயிற்சி தொடங்கியது
சில காலமாய் கட்டிலிலிருந்தே...
எவ்வளவு சொத்து எவ்வளவு தொகை
என்பது முக்கியமில்லை இப்போது ...
உயிர் இழுக்கும் போட்டியில்
இன்னும் எத்தனை நொடிகள் தாங்கிப்
பிடிப்பது காலனிடம் என்பதே…

வெற்றிடம் நிரம்பும்

அவசரம் கருதி அன்றிரவு எல்லாம்
கண்விழித்து முடித்துக் கொடுத்த
தருணத்தை நினைக்காதீர்...
உன்னைவிட்டால் ஆளில்லை என்று
பலமுறை உச்சத்தில் தூக்கி வைத்த
பெருமையைத் தேடாதீர்...
இத்தனை வருடங்கள் தூணென
இருந்தும் துரும்பென ஊதித்
தள்ளியதில் வருந்தாதீர்...
எங்கே தவறவிட்டேன் என்று
உங்களையே துளைத்துக் கொண்டு
கேள்விகளை எழுப்பாதீர்...
எங்கேனும் அமையும் வெற்றிடம்
அதனுள் உங்களை இட்டு நிரப்பும்
நம்பிக்கை விடாதீர்…

என் இனிய பயணம்

பரந்த உலகத்தில்
எனக்காய் ஒரு வனமுண்டு
அவ்வனத்தில் எனக்காய் ஒரு கொடியுமுண்டு
அக்கொடியிலே எனக்காய்
பூவொன்று பூப்பதுண்டு
அப்பூவிலே எனக்காய் மணமுண்டு
அம்மணத்தை நுகர்ந்துவிட்டால்
எனக்கு செழித்த வாழ்வுண்டு
அவ்வனத்தை அடைந்துவிடும்
பயணத்தை இதோ இனிதே
தொடங்கிவிட்டேன் முகவரிப் பற்றிய 
குறிப்பை மட்டும் தொலைத்துவிட்டு...
READ MORE
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/category.php

    Line Number: 297

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
    Line: 297
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
    Line: 49
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>01
  • 0
  • category

    வாஞ்சி கவிதைகள்

    கீழடி மேன்மை பாடுவோம்

     

    மூவாயிரம் ஆண்டுக்கு முந்தியகுடியில்

    பெண்மையைப் போற்றிடும் தமிழ்க்குடியில்

    புள்ளிமானே கல்விமானாய் துள்ளித்திரிந்த

    வள்ளிக்குறத்தியின் மெல்லினக்காதல்

     

    நீள்சதுரமாய் செங்கலடுக்கி

    ஆள்உயரமாய் சுவரெடுத்து

    கால்பதித்திடக் கல்த்தரையும்

    கோலோச்சிட நான்மாடமும்

     

    அரியணைக்கு அரண்மனையும்

    பஞ்சணைக்கு அந்தப்புரமும்

    மழைநீர் படிந்திட வட்டக்கால்வாயும்

    கழிவுநீர் வடிந்திட மூடியவாய்காலும்

     

    கரைபுரண்டோடும் வைகையில்

    திரைகடந்துவந்து வணிகம்செய்து

    மேலைநாட்டு நாணயமும்

    வேலைப்பாடுடை பொன்னும்மணியும் பரிசளிக்க

     

    சாதிமத பேதமின்றி

    மேதினியாளும் ஆதனை

    மாலைசூடி மணந்திடவே

    ஓலையனுப்பினாள் மண்பானை ஓட்டில்

     

    உற்றாரும் ஊராரும்

    பெற்றோரும் பெருமக்களும்

    வரிசையோடு பரிசம்போட விரைந்திட

    உதிரனும் திசனும் கொம்பூதி வரவேற்க

     

    ஈழம் தாண்டிவந்து

    ஞாலம் அழிக்கவந்த ஆழிப்பேரலை

    தமிழகத்தை தனக்குள்ளே விழுங்கிட

    தமிழினமே சமாதியானது தமிழியோடு

     

    தொல்பொருள் கண்டெடுத்தக் கல்லோவியமே

    தொல்காப்பியம் ஈன்றெடுத்தத் தமிழ்க்கீழடி

    அழிந்துபோன வரலாற்றின் நாகரீகச்சின்னமே

    அழியாதகாதலின் சரித்திரக்காவியம்...!!!

     




    இருட்டில் ஏது நிழல்

     

    மதமும் சாதியும்

    சடங்குச் சன்னலைச் சாத்திவிட

    கதவில்லா வாசலொன்று

    மூடிக்கிடக்கிறது

    முறிந்துபோன உறவுகளின்

    முன் நெற்றி ரேகைகள் முடிச்சாய்

    பின்னிக் கிடக்கிறது 

     

    வாசம் செய்தவர்

    வனதேசம் போய்விட

    விட்டுச்சென்ற மூச்சுக்காற்று 

    திரைச்சீலையில் ஊஞ்சலாடி

    திரும்ப வராத தினங்களை

    தீர்த்து வைக்க முயன்று தோற்கிறது

     

    அக்னியின் சாட்சியாக 

    அடியெடுத்து வைத்தவர்

    குத்துவிளக்கு ஏற்றிட

    சுவர்களில் படிந்த வெளிச்சம் 

    படியாத ஒட்டடையாய்

    குடியேறிய நினைவுகளைச்

    சுமந்து நிற்கிறது

     

    கொஞ்சிச் சிரித்து

    நெஞ்சில் சுமந்து

    கட்டில் கால்கள் வரைந்த

    காலடி ஓவியங்கள்

    கீழடியில் கண்டெடுத்த

    கல்வெட்டாய் கண்முன் விரிகிறது 

     

    கூடி வாழ்ந்து ஓடித் திரிந்த

    கால்தடங்கள் வீடெங்கும்

    அழியாத கோலங்களாய்

    அழுக்கின் அடியில் படிந்து கிடக்கிறது 

     

    புதர்மண்டிக் கிடக்கிறது 

    புனிதமாய் பூசித்த

    பூஜையறையும் தூசுபடிந்து

    பதித்துச்சென்ற தடங்கள் வடுக்களாகி

    ஆறிப்போன காயத்திலும்

    ஆறாத வலியினை அமைதியாய்ச் சுமக்கிறது

     

    வெறிநாய்களும் ஓநாய்களும்

    வேலி தாண்டி வேதனை கூட்ட

    இருப்பைத் துறந்து

    இடிந்து விழ நினைக்க

    மடிந்து மாயாதே

    துணிந்து நில்

    இனி வசப்படும் பார்..

    அதட்டி அடக்கியது ஆழ்மனம்

     

    இல்லையென அறிந்தும் 

    இருட்டில் நிழல்தேடி அலைகிறது

    இற்றுப்போன இதயம்

     

    அகல்விளக்கு ஏற்ற

    அக்னிச் சந்தையில் காத்திருக்கிறது 

    ஆளின்றி அடக்கமாகிப் போன

    இல்லமொன்று..!!!!

     


     

    அன்பும் மனிதமும்

     

    நியூயார்க் நகரம்..

     

    மேக கூட்டமும் திணறும்

    வான்வழியை மறைத்து நிற்கும்

    இதன் கட்டிடங்களின் முனைகண்டு

    உலகின் உச்சத்தில் அமர்ந்து 

    அழகை ரசிக்க வரும் மக்கள் ஒருபுறம் 

    கற்ற அறிவை விற்றுப் பிழைக்க வரும்

    சான்றோர் கூட்டம் மறுபுறம் 

     

    உலகின் உயிர்மூச்சைப் பிடித்து

    சுவாசச் சங்கிலியில் பிணைத்து

    அடுக்குமாடிப் பெட்டிக்குள்

    அடைத்துவைத்த அற்புதமது

     

    சிறகின்றி பறந்துவந்தச் சீன

    சிறுகிருமியொன்று நுழைந்து

    நகரத்தை நரகமாக்கிவிட்டு

    நகர்ந்து போனது அடுத்த நகரம் தேடி

    செல்வமும் செழிப்பும் உள்ளவர்

    சொல்லாமல் செல்லுக்குள் ஒளிந்துகொள்ள

    செல்லவழியில்லாதவர் செத்துப்

    பிணங்களாய் குவிந்து போக

    அடைத்து வைக்கவோ பெட்டியில்லாமல்

    அடக்கம் செய்யவோ இடமில்லாமல்

    சடலங்களே சவக்கிடங்கு வாசலில்

    சமாதியாக வரிசையில் கிடந்த அவலமும்

    அமைதியாக அரங்கேறியது அங்கே

     

    கருப்புப்பையில் அடைத்து

    சரக்கு வாகனத்தில் குவித்து

    சாலையோரத்தில் நிறுத்திவிட்டு 

    காணாமல் போயினர் வாகனமோட்டிகள்

    உறவுகளும் உடைமைகளும் இருந்தும்

    சாலையோரத்தில் அனாதைப் பிணமாய்

    அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிட

    அருகிலுள்ளோர் அச்சத்தில் உறைந்து

    சவக்கிடங்கு ஊழியரிடம் முறையிட

    மனிதநேயம் கொண்ட அவன்

    தொற்றுமெனத் தெரிந்தும்

    பிணக்குவியலை பற்றியிழுக்க

    சுழன்று விழுந்தது சடலமொன்று

    சுற்றியிருந்த பைகிழிந்து

     

    குப்புறக்கிடந்த பெண்பிணத்தை

    கைகளால் திருப்பிட

    பெற்றவள் முகம்கண்டான்

    மூர்ச்சையாகி விழுந்தான்

    அன்பு கலந்த மனிதம் அங்கே அழுதிட..!!!

     



    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 297

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 297
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>01
  • 0